காரைக்கால் துறைமுகத்தில் சனிக்கிழமை 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
அந்தமான் அருகே வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு செய்தது.
துறைமுகங்களுக்கு இதுகுறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டதையொட்டி காரைக்கால் துறைமுகத்தில் சனிக்கிழமை பிற்பகல் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.
புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்பட்டாலும், காரைக்கால் பகுதியில் கடும் வெயில், அனல் காற்று வீசுகிறது. மீனவர்கள் வழக்கம்போல கடலுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.