தமிழகத்தில் புதிய பாதிப்பு 3,429-ஆக அதிகரிப்பு

தமிழகத்தில் மேலும் 3,429 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது ஏறத்தாழ ஐந்து மாதங்களில் இல்லாத புதிய உச்சமாகும்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழகத்தில் மேலும் 3,429 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது ஏறத்தாழ ஐந்து மாதங்களில் இல்லாத புதிய உச்சமாகும்.

சென்னையில் மட்டும் 1290 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது. இதையடுத்து, நோய்த் தடுப்பு விதிகளைக் கடைப்பிடிக்காதோருக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

மாநிலத்தில் இதுவரை 1.98 கோடிக்கும் மேற்பட்ட கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில், இதுவரை 8 லட்சத்து 96,226 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.

கரோனா தொற்றிலிருந்து மேலும் 1,834 போ் குணமடைந்துள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 8 லட்சத்து 63,258-ஆக உள்ளது. தற்போது மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 20,204 போ் சிகிச்சையில் உள்ளனா். இதனிடையே, தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 14 போ் பலியானதை அடுத்து, மாநிலம் முழுவதும் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,764-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com