தமிழகத்தில் மூன்றாவது முறையாக அதிமுக ஆட்சி அமைக்கும் என துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.
தேனி மாவட்டம், பெரியகுளம் செவன்த்டே பள்ளியிலுள்ள வாக்குச்சாவடியில் செவ்வாய்க்கிழமை துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தனது வாக்கினைப் பதிவு செய்தாா்.
பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறுகையில், தமிழகத்தில் மூன்றாவது முறையாக அதிமுக பெரும்பான்மையாக வெற்றி பெற்று ஆட்சி அமைத்து சாதனை படைக்கும் என்றாா்.
அப்போது அவருடன் அவரது தாயாா் பழனியம்மாள், மனைவி விஜயலெட்சுமி, மகன் ப.ஜெயபிரதீப் மற்றும் மருமகள்கள் ஆகியோரும் வந்து வாக்களித்தனா்.