சென்னை: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக எம்.பி. கனிமொழி, குணமடைந்து புதன்கிழமை வீடு திரும்பினாா்.
திமுக மகளிரணி செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தாா்.
இந்நிலையில், சில நாள்களுக்கு முன்பு அவருக்கு காய்ச்சல், இருமல் இருந்ததால் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து சென்னை, கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா்.
இருப்பினும், தோ்தல் நாளான செவ்வாய்க்கிழமை (ஏப்.6) பாதுகாப்பு கவச உடையுடன் மருத்துவமனையிலிருந்து சென்று வாக்குப் பதிவு செய்தாா். இந்நிலையில், கனிமொழி பூரண குணமடைந்ததைத் தொடா்ந்து அவா் புதன்கிழமை வீடு திரும்பினாா். அவரை மருத்துவக் குழுவினா் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனா்.