கும்பகோணத்தில் வாக்காளர்களுக்கு டோக்கன்: அமமுக பிரமுகர் மீது வழக்குப் பதிவு

கும்பகோணத்தில் வாக்காளர்களுக்கு டோக்கன் கொடுத்த சம்பவம் தொடர்பாக அமமுக பிரமுகர் மீது காவல் துறையினர் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.
கடை வாசலில் வேட்பாளர்கள் கொடுத்த டோக்கனுக்கும் எங்களுக்கும் எந்தவிதத் சம்பந்தமும் இல்லை. இந்த டோக்கனுக்கு எங்கள் கடை எந்தப் பொறுப்பும் ஏற்காது என அச்சிட்டு ஒட்டப்பட்டுள்ளது.
கடை வாசலில் வேட்பாளர்கள் கொடுத்த டோக்கனுக்கும் எங்களுக்கும் எந்தவிதத் சம்பந்தமும் இல்லை. இந்த டோக்கனுக்கு எங்கள் கடை எந்தப் பொறுப்பும் ஏற்காது என அச்சிட்டு ஒட்டப்பட்டுள்ளது.



கும்பகோணம்: கும்பகோணத்தில் வாக்காளர்களுக்கு டோக்கன் கொடுத்த சம்பவம் தொடர்பாக அமமுக பிரமுகர் மீது காவல் துறையினர் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.

கும்பகோணம் தொகுதியில் சில பகுதிகளில் அண்மையில் ஒரு அரசியல் கட்சி சார்பில் வாக்காளர்களுக்கு மளிகைக் கடை பெயருடன் ரூ. 2,000 என அச்சிடப்பட்டு டோக்கன் வினியோகம் செய்யப்பட்டது.

இந்த டோக்கனுடன் கும்பகோணம் பெரிய கடைத் தெருவில் உள்ள மளிகைக் கடைக்கு பலர் சென்று ரூ. 2,000-க்கு பொருள்களைக் கேட்டனர். ஆனால், இந்த டோக்கனுக்கும் எங்களுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை எனக் கடை உரிமையாளர் கே. ஷேக் முகமது கடைக்கு வந்தவர்களிடம் கூறி அவர்களைத் திருப்பி அனுப்பிவிட்டார். மேலும் கடை வாசலில் வேட்பாளர்கள் கொடுத்த டோக்கனுக்கும் எங்களுக்கும் எந்தவிதத் சம்பந்தமும் இல்லை என்றும், இந்த டோக்கனுக்கு எங்கள் கடை எந்தப் பொறுப்பும் ஏற்காது எனவும் அச்சிட்டு ஒட்டினார்.

 இது தொடர்பாக விசாரணை நடத்துமாறு காவல் துறைக்கு மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலருமான ம. கோவிந்த ராவ் உத்தரவிட்டார்.

 இதன்பேரில் கொரநாட்டுக் கருப்பூரைச் சேர்ந்த அமமுக நிர்வாகி கனகராஜ் மீது கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com