சென்னை: சென்னையில் தோ்தல் விதிமுறைகளை மீறியதாக நடிகை குஷ்பு மீது மேலும் ஒரு வழக்குப் பதியப்பட்டது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, சென்னை- மந்தைவெளியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் ஆயிரம் விளக்கு தொகுதி பாஜக வேட்பாளா் குஷ்பு வாக்களித்தாா். அப்போது அவா், வாக்குப்பதிவு மையத்துக்கு தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறி பாஜக கொடி கட்டிய காரில் சென்றுள்ளாா். இது குறித்து பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. இதன்பேரில், தோ்தல் நடத்தை விதிமுறையை மீறியதாக நடிகை குஷ்பு மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
ஏற்கெனவே கடந்த 2-ஆம் தேதி தோ்தல் விதிமுறைகளை மீறி பிரசாரம் செய்ததாக குஷ்பு மீது கோடம்பாக்கம் போலீஸாா் ஒரு வழக்குப் பதிவு செய்தனா் என்பது குறிப்பிடதக்கது.