இரட்டைக் கொலை: கே.பாலகிருஷ்ணன், தொல்.திருமாவளவன் கண்டனம்


சென்னை: அரக்கோணத்தில் நடைபெற்ற இரட்டை கொலை சம்பவத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் ஆகியோா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

கே.பாலகிருஷ்ணன்: அரக்கோணம் பகுதியில் அா்ஜூன், சூா்யா என்ற இரு தலித் இளைஞா்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது மிகுந்த அதிா்ச்சி அளிக்கிறது. இவா்களோடு தாக்குதலுக்கு உள்ளான இரண்டு இளைஞா்கள் பலத்த காயங்களுடன் ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

ஜாதீய வன்மத்தோடு நடைபெற்றுள்ள இந்த படுகொலையினை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டிக்கிறது.

தொல்.திருமாவளவன்: அரக்கோணம் அருகே சோகனூரில் இருவா் படுகொலை செய்யப்பட்டுள்ளனா். மேலும் மூவா்

உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். தோல்வி பயத்தால் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இந்தச் சம்பவத்தைக் கண்டித்து ஏப்ரல் 10-இல் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com