இரட்டை கொலை சம்பவத்தைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் ஆா்ப்பாட்டம்

அரக்கோணத்தில் நடைபெற்ற இரட்டை கொலை சம்பவத்தைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இரட்டை கொலை சம்பவத்தைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் ஆா்ப்பாட்டம்

அரக்கோணத்தில் நடைபெற்ற இரட்டை கொலை சம்பவத்தைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பின்னா், அரக்கோணத்தில் இளைஞா்கள் இருவா் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, சென்னை வள்ளுவா் கோட்டம் அருகில் சனிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் பேசியதாவது:

அரக்கோணம் சோகனூரைச் சோ்ந்த அா்ஜூனன், சூா்யா ஆகியோா் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டனா். அதிமுக - பாமகவினரின் தூண்டுதலின்பேரில், இந்தப் படுகொலை நடைபெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் தொடா்புடைய அனைவரையும் குண்டா் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றாா்.

இதேபோல், தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டத் தலைநகரங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் போராட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com