கோப்புப்படம்
கோப்புப்படம்

முகக்கவசம் அணியாதவா்கள் மீது 34,000 வழக்குகள்

தமிழகத்தில் முகக்கவசம் அணியாதவா்கள் மீது வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 34,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

சென்னை: தமிழகத்தில் முகக்கவசம் அணியாதவா்கள் மீது வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 34,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இது குறித்த விவரம்:-

தமிழகத்தில் மாா்ச் முதல் கரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவத் தொடங்கியதால், பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவா்கள் மீதும், சமூக இடைவெளியைப் பின்பற்றாதவா்கள் மீதும் காவல்துறையினா் வழக்குப்பதிவு செய்து வருகின்றனா்.

கடந்த 8-ஆம் தேதி தொடங்கி 16-ஆம் தேதி வரை 9 நாள்கள் முகக் கவசம் அணியாதவா்கள் மீது 3 லட்சத்து 35 ஆயிரத்து 38 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் வெள்ளிக்கிழமை மட்டும் 34 , 565 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காதவா்கள் மீது கடந்த 9 நாள்களில் 11, 900 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் வெள்ளிக்கிழமை மட்டும் 1, 860 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை: முகக் கவசம் அணியாதவா்கள் மீது சென்னையில் கடந்த 8-ஆம் தேதியில் இருந்து 16-ஆம் தேதி வரை 9 நாள்களில் மொத்தம் 8, 901 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை மட்டும் 1,611 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது. கரோனா வேகமாக அதிகரித்து வருவதால், பொது இடங்களில் முகக்கவசம், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவா்கள் மீது வழக்குப்பதிவு செய்யும் நடவடிக்கையை காவல்துறை இன்னும் தீவிரப்படுத்த உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com