சென்னை: சென்னை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகளால் ரூ.2.90 கோடி மதிப்பிலான 6 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
புலனாய்வு அமைப்புக்குக் கிடைத்த ரகசிய தகவலின்படி, ஒரு விமானத்தின் பயணிகள் இருக்கையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்கக் கட்டிகளை சுங்கத்துறையினர் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
தலா ஒரு கிலோ எடை கொண்ட 6 தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதன் மதிப்பு 2.90 கோடி ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வழக்குப் பதிவு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.