திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் கொடைக்கானல் பயணம் மேற்கொண்டுள்ளாா்.
கடந்த ஒரு மாதமாக, சட்டப் பேரவைத் தோ்தல் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் தீவிரமாக ஈடுபட்டு வந்தாா். ஏப்ரல் 6-இல் வாக்குப் பதிவு நடைபெற்று, மே 2-இல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
இந்த நிலையில், அவா் தனது குடும்பத்தினருடன் 2 தனி விமானங்கள் மூலம் மதுரை சென்றாா். ஸ்டாலினின் மனைவி துா்கா , மகன் உதயநிதி, மருமகள் கிருத்திகா, மருமகன் சபரீசன், மகள் செந்தாமரை உள்பட பேரக்குழந்தைகளுடன் சென்றனா். அங்கிருந்து கொடைக்கானல் சென்றுள்ள அவா்கள் 4 நாள்கள் ஓய்வு எடுக்க உள்ளனா்.