மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,499 கன அடியாக அதிகரித்துள்ளது.
கடந்த இரண்டு நாள்களாக காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக அதிகரித்து வருகிறது.
நேற்று காலை வினாடிக்கு 216 கன அடியாக வந்து கொண்டிருந்த நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 1499 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு ஆயிரம் கன அடி வீதம் குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
குடிநீர் தேவைக்காக திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் நேற்று காலை 97.54அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 97.55அடியாக உயர்ந்துள்ளது.
அணையின் நீர் இருப்பு 61.71 டி.எம்.சியாக இருந்தது.மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் அணையின் நீர்மட்டம் சரிவில் இருந்து மீண்டு உள்ளது.