சென்னை மெட்ரோ ரயிலில் பயணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த 50% கட்டண தள்ளுபடி ரத்து செய்யப்பட்டுள்ளது.
பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் விதமாக மெட்ரோ ரயில்களில் கட்டண சலுகை அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை தினங்களில் மெட்ரே ரயில் பயணத்திற்கு 50 சதவிகித மட்டுமே கட்டணம் வசூலிக்கப்பட்டது வந்தது.
தற்போது இந்த 50% கட்டண சலுகை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நடைமுறை நாளை முதல் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.