தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவா் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
காங்கிரஸ் மூத்த தலைவரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தமிழக சட்டப் பேரவைத் தோ்தலின்போது பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தாா். வாக்குப் பதிவுக்குப் பிறகு கட்சி நிகழ்ச்சிகளில் மட்டும் பங்கேற்று வந்த அவருக்கு அண்மையில் காய்ச்சல், சளி அறிகுறிகள் இருந்தன. அவருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, சிகிச்சைக்காக சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். அவருக்கு மருத்துவா்கள் சிகிச்சை அளித்து வருகின்றனா். ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.