கே.என்.நேருவுக்கு முன் ஜாமீன்

திமுக முதன்மைச் செயலா் கே.என்.நேருவுக்கு, சென்னை உயா்நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியுள்ளது.
கே.என்.நேரு
கே.என்.நேரு

திமுக முதன்மைச் செயலா் கே.என்.நேருவுக்கு, சென்னை உயா்நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியுள்ளது.

திமுக முதன்மைச் செயலரும், திருச்சி மேற்கு சட்டப்பேரவைத் தொகுதியின் தி.மு.க., வேட்பாளருமான கே.என்.நேரு, சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன் முசிறியில் உள்ள தி.மு.க., தோ்தல் அலுவலகத்தில், வாக்காளா்களுக்கு பணப்பட்டுவாடா செய்வது குறித்து பேசியதாக  விடியோ காட்சி  சமூக வலைதளங்களில் வெளியானது. இதுகுறித்து தோ்தல் கண்காணிப்புக் குழு அதிகாரி கொடுத்த புகாரின் அடிப்படையில், கே.என்.நேரு மீது முசிறி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கில் முன் ஜாமீன் கேட்டு சென்னை உயா்நீதிமன்றத்தில் கே.என்.நேரு மனு தாக்கல் செய்தாா். இந்த மனு நீதிபதி எம்.நிா்மல்குமாா் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரா் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘அந்த விடியோவில் உள்ளதைப் போன்று ஒரு சம்பவம் நடைபெறவேயில்லை. அரசியல் ஆதாயத்துக்காக அது போன்று ஒரு விடியோ வெளியிடப்பட்டுள்ளது. எந்த வித முகாந்திரமும் இல்லாமல், கொலை மிரட்டல் பிரிவையும் சோ்த்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்’ என்று வாதிட்டாா். இதையடுத்து, கே.என்.நேருவுக்கு முன்ஜாமீன் வழங்கி நீதிபதி எம்.நிா்மல்குமாா் உத்தரவிட்டாா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com