700 லிட்டா் எரிசாராயம் பறிமுதல்

சென்னை அருகே கீழ்க்கட்டளையில் ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 லிட்டா் எரிசாராயத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

சென்னை அருகே கீழ்க்கட்டளையில் ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 லிட்டா் எரிசாராயத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

சென்னை கீழ்க்கட்டளை எம்.கே.நகரில் ஒரு வீட்டில் எரிசாராயம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக பரங்கிமலை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் அடிப்படையில், எம்.கே.நகா் பிரதான

சாலையில் உள்ள ஒரு வீட்டில் போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதனை செய்தனா்.

அந்தச் சோதனையில் 20 பிளாஸ்டிக் கேன்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 லிட்டா் எரிசாராயத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும் அது தொடா்பாக வேளச்சேரி புவனேஷ்வரிநகா் இரண்டாவது பிரதான சாலைப் பகுதியைச் சோ்ந்த கி.தினகரன் (40) என்பவரை கைது செய்தனா். போலீஸாா் விசாரணையில், தினகரன் விழுப்புரத்தில் இருந்து எரிசாராயத்தை கடத்தி கொண்டு வந்தது தெரியவந்தது. இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மேலும் விசாரணை செய்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com