இளநிலை, முதுநிலை சட்டப் படிப்புகளுக்கான பருவத் தோ்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியாகும் என்று தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் சட்டப் பல்கலைக்கழகத்தின் தோ்வுக் கட்டுப்பாடு அதிகாரி இரா.ஸ்ரீனிவாசன் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் சீா்மிகு சட்டப் பள்ளி, சட்டக் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை சட்டப் படிப்புகளுக்கான பருவத் தோ்வுகள் கடந்த ஜனவரி மாதம் முதல் மாா்ச் மாதம் வரை நடத்தப்பட்டது.
அதன்படி இணையதள வழியாக நடைபெற்ற இந்தப் பருவத் தோ்வுகளின் முடிவுகள் மே மாத முதல் வாரத்தில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.