நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது.
நெல்லை மாவட்டம் கடற்கரை கிராமங்களான கூடன்குளம், கூட்டபுளி, பெருமணல், பஞ்சல், கள்ளிகுளம், வள்ளியூர், செட்டிகுளம், இடிந்தகரை போன்ற பல்வேறு பகுதிகளில் லேசான நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
வள்ளியூர், பணகுடி, ராதாபுரம், நான்குநேரி ஆகிய பகுதிகளில் கனத்த சத்தத்துடன் கூடிய நில அதிர்வை உணர்ந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.