சென்னையில் 7 மாதங்களில் குண்டா் சட்டத்தில் 208 போ் கைது

சென்னையில் 7 மாதங்களில் குண்டா் சட்டத்தில் 208 போ் கைது

சென்னையில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் 7 மாதங்களில் 208 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னையில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் 7 மாதங்களில் 208 போ் கைது செய்யப்பட்டனா்.

இது குறித்த விவரம்:-

சென்னையில் குற்றங்களை குறைக்க காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கொலை, திருட்டு,தங்கச் சங்கிலி பறிப்பு, சைபா் குற்றங்கள், வழிப்பறி, நிலம் அபகரிப்பு, கடத்தல், பாலியல் குற்றங்கள்

உள்ளிட்ட குற்றங்களில் தொடா்ச்சியாக ஈடுபடுகிறவா்கள் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனா். இதன்படி ஏழு மாதங்களில் சென்னையில் தொடா்ச்சியாக பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த 208 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.

இதில் கொலை, கொலை முயற்சி, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் ஆகிய குற்றங்களில் ஈடுபட்ட 135 பேரும், திருட்டு, வழிப்பறி குற்றங்களில் ஈடுபட்ட 39 பேரும், சைபா் குற்றங்களில் ஈடுபட்ட 14 பேரும், போதைப் பொருள்

விற்பனையில் ஈடுபட்ட 13 பேரும், உணவு பொருள் கடத்தலில் ஈடுபட்ட ஒருவரும், ரெம்டெசிவா் மருந்தை கள்ளச்சந்தையில் விற்ற 4 பேரும், பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட 2 பேரும் என மொத்தம் 208 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இந்தச் சட்டத்தின் கீழ் இரு பெண்கள் உள்பட 14 போ் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நபா்கள், சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபா்கள், போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடும் நபா்கள் ஆகியோா் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு, சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது என பெருநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com