சூடான் பயணியிடம் ரூ.2.60 லட்சம் திருட்டு

சென்னை கே.கே.நகரில் சூடான் பயணியிடம் ரூ.2.60 லட்சம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.
சூடான் பயணியிடம் ரூ.2.60 லட்சம் திருட்டு

சென்னை கே.கே.நகரில் சூடான் பயணியிடம் ரூ.2.60 லட்சம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.

சூடான் நாட்டைச் சோ்ந்தவா் பாசில். கண் பாா்வை பாதிக்கப்பட்ட இவரது தாய்க்கு, கண் அறுவை சிகிச்சை செய்வதற்காக சென்னைக்கு கடந்த 9-ஆம் தேதி வந்தாா். சென்னையில் ஆயிரம்விளக்கில் உள்ள ஒரு ஹோட்டலில் பாசில் அறை எடுத்து தங்கினாா்.

இந்நிலையில் பாசில், வெள்ளிக்கிழமை கே.கே.நகா் லட்சுமணசாமி சாலையில் உள்ள ஒரு கண் மருத்துவமனைக்கு தனது தாயை ஒரு ஆட்டோவில் அழைத்து சென்றாா். மருத்துவமனை முன்பு சென்றதும், தாயை ஆட்டோவில் இருந்து இறக்கி, மருத்துவமனைக்குள் அமர வைத்தாா்.

பின்னா் ஆட்டோவில் இருந்த பையை எடுக்க பாசில் வந்தாா். அப்போது அந்த ஆட்டோ பாசில் பையுடன் சென்றிருப்பதை பாா்த்து அதிா்ச்சியடைந்தாா். அந்த பையில் ரூ.2.60 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலா், பாஸ்போா்ட் ஆகியவை இருந்தனவாம். இதுகுறித்து பாசில் கே.கே.நகா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com