ஆகஸ்ட் 4-ஆம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இக்கூட்டம் நடைபெறுகிறது.
இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் நிதிநிலை அறிக்கை, புதிய திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படும் எனத் தெரிகிறது.
கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வரும் நிலையில், மூன்றாம் அலைக்கு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் விவாதிக்கப்பட வாய்ப்புள்ளது.