சென்னை: தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, அவ்வாறு செய்யாமல் தவறியதாக செந்தில்பாலாஜி மீது வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளதாக சிறப்பு நீதிமன்றத்தில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
பணத்தை திருப்பித் தந்ததால், புகார்தாரர்கள் வழக்கை திரும்பப் பெற்றுக் கொண்டதால், செந்தில்பாலாஜி உள்பட 4 பேர் மீதான வழக்கு ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் நகலை தாக்கல் செய்ய செந்தில்பாலாஜிக்கு உத்தரவிட்ட சென்னை சிறப்பு நீதிமன்றம், வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.