ரயில் பயணச் சலுகை: தருமபுரியில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

ரயில் பயண சலுகை பறிப்பு நடவடிக்கையை கைவிடக் கோரி தருமபுரியில் ரயில் நிலையம் முன்பு மாற்றுத்திறனாளிகள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாலக்கோடு ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகள்.
பாலக்கோடு ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகள்.

தருமபுரி: ரயில் பயணச் சலுகை பறிப்பு நடவடிக்கையை கைவிடக் கோரி தருமபுரியில் ரயில் நிலையம் முன்பு மாற்றுத்திறனாளிகள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் சங்கம் சார்பில் நடைபெற்ற
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலர் கே.ஜி.கரூரான் தலைமை வகித்தார். இதில் மாற்றுத் திறனாளிகளுக்கான ரயில் பயண சலுகை பறிப்பு நடவடிக்கையை கைவிட வேண்டும், இரு சக்கர வாகனங்களுக்கு பெட்ரோல் மானியம் வழங்க வேண்டும், நடைமேடை கட்டண வசூலை திரும்பப் பெற‌ வேண்டும், அனைத்து ரயில் நிலையங்களிலும் தானியங்கி படிக்கட்டுகளை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி பாலக்கோடு ரயில் நிலையம் முன்பு மாற்றுத் திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com