லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையைத் தொடா்ந்து எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமியை, முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி சந்தித்துப் பேசினாா்.
அதிமுகவைச் சோ்ந்த முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி மற்றும் அவரது உறவினா்களுக்கு உரிய 60 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினா் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினா்.
சட்டப்பேரவை உறுப்பினா்கள் விடுதியில் எஸ்.பி.வேலுமணியிடம் லஞ்ச ஒழிப்புத் துறையினா் 12 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை மேற்கொண்டனா். பல்வேறு ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு 9.20 மணியளவில் கிரீன்வேஸ் சாலையில் உள்ள எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடிகே. பழனிசாமி இல்லத்துக்கு எஸ்.பி.வேலுமணி வந்து சோதனை விவரங்கள் அனைத்தையும் எடுத்துரைத்தாா். இந்தச் சந்திப்பு ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது.