விருதுநகர் அருகே முன்னாள் ஊராட்சித் தலைவர் வெட்டிக் கொலை

விருதுநகர் அருகே வச்சகாரபட்டி முன்னாள் ஊராட்சித் தலைவர் அனந்தராமன் முன்பகை காரணமாக வெள்ளிக்கிழமை காலை வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
கொலை செய்யப்பட்ட வச்சகாரபட்டி முன்னாள் ஊராட்சித் தலைவர் அனந்தராமன்.
கொலை செய்யப்பட்ட வச்சகாரபட்டி முன்னாள் ஊராட்சித் தலைவர் அனந்தராமன்.


விருதுநகர்: விருதுநகர் அருகே வச்சகாரபட்டி முன்னாள் ஊராட்சித் தலைவர் அனந்தராமன் முன்பகை காரணமாக வெள்ளிக்கிழமை காலை வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

விருதுநகர் அருகே வச்சக்கார பட்டியை சேர்ந்தவர் அனந்தராமன் (45). முன்னாள் ஊராட்சித் தலைவரான இவர், ஒரு திருமணத்தில் கலந்துகொண்டு இருசக்கர வாகனத்தில் பூசாரிபட்டி விலங்கு அருகில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த ஒரு கும்பல் வழிமறித்து அனந்தராமனை வெட்டிக்  கொலை செய்தனர். 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வச்சகாரபட்டி போலீசார் அனந்தராமன் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் இந்த கொலை தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com