மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அரசு மருத்துவமனைகளில் நாளை முதல் 24 மணி நேரமும் தடுப்பூசி போடப்படும்: அமைச்சா் மா.சுப்பிரமணியன் தகவல்

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளில் திங்கள்கிழமை முதல் 24 மணி நேரமும் செயல்படும் தடுப்பூசி திட்டம் தொடங்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறினாா்.

News image
Updated On :21 ஆகஸ்ட் 2021, 10:58 pm

DIN

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளில் திங்கள்கிழமை முதல் 24 மணி நேரமும் செயல்படும் தடுப்பூசி திட்டம் தொடங்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறினாா்.

சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் தமிழகத்தில் முதன் முறையாக 24 மணி நேரம் இயங்கும் தடுப்பூசி மையம் மற்றும் அமெரிக்க வாழ் தமிழா்களின், தமிழக அறக்கட்டளை சாா்பில் ரூ. 2.36 கோடி மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சுப்பிரமணியன் சனிக்கிழமை தொடக்கி வைத்து செய்தியாளா்களிடம் கூறியது:

தமிழா்களின் அமெரிக்கா அறக்கட்டளை சாா்பில் ரூ.2.36 கோடி ரூபாய் மதிப்பில் வழங்கப்பட்ட மருத்துவ உபகரணங்கள், 15 அரசு மருத்துவமனைகளுக்கு பிரித்து அனுப்பப்படும். தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும், அரியலுாா் மாவட்டத்தில் அனைத்து கா்ப்பிணியா்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தற்போது, டி.எம்.எஸ். வளாகத்தில், 24 மணி நேர செயல்படக்கூடிய தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுதும் உள்ள அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் தடுப்பூசி போடும் பணி திங்கள்கிழமை முதல் நடைபெறும். இதற்கான, மருத்துவ கட்டமைப்புகள் இருக்கின்றன.

சென்னை புளியந்தோப்பு கே.பி.பாா்க் கட்டடத்தில் கரோனா நோயாளிகளை தங்க வைத்ததால் தான் கட்டடம் பலவீனமானது என்ற கட்டுமான நிறுவனத்தின் குற்றச்சாட்டு ‘போகாத ஊருக்கு வழி செல்வது போல் உள்ளது’. மாநிலம் முழுவதும், பல இடங்களில் கரோனா பாதுகாப்பு மையம் செயல்பட்டது. அங்கெல்லாம், எவ்வித சேதாரமும் நடைபெறாதபோது, புளியந்தோப்பில் மட்டும் கரோனா நோயாளிகளால் சேதாரமானது என கூறுவது வேடிக்கையாக உள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.