‘எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி செயல்பட இலக்கணமாக இருப்பவர் துரைமுருகன் ’: ஓபிஎஸ்

எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கு இலக்கணமாக இருப்பவர் துரைமுருகன் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்

எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கு இலக்கணமாக இருப்பவர் துரைமுருகன் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

பேரவையில் முதலாவது நீர்வளத்துறை மானிய கோரிக்கை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் இன்று, தமிழக அமைச்சர் துரைமுருகனுக்கு பாராட்டு தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் முன்மொழிந்தார்.

அப்போது அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில்,

 “சட்டப்பேரவையில் 50 ஆண்டுகளாக அனைவரது மனதையும் கவர்ந்தவர் துரைமுருகன். சூடாக பேசுவார், உடனே அடுத்த விநாடியே இனிமையாக பேசும் ஆற்றல் கொண்டவர் துரைமுருகன். எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கு இலக்கணமாக இருப்பவர் துரைமுருகன்.”

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com