தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,573 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக 27 பேர் உயிரிழந்தனர்.
தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத் துறை புதன்கிழமை (ஆக.25) வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இதையும் படிக்க | கர்நாடகத்தில் 1,224 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு
புதிதாக 1,56,985 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 1,573 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26,05,647-ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிக்க | கோவை, சென்னையில் குறையும் கரோனா பாதிப்பு
புதிதாக 27 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34,788-ஆக அதிகரித்துள்ளது.
கரோனாவிலிருந்து 1,797 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 25,52,507-ஆக அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க | சென்னை: பணியின்போது மண்சரிவில் சிக்கிய 3 தொழிலாளர்கள்; ஒருவர் பலி
கரோனாவால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 18,352 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.