தைப்பூச விழா: மேல்மருவத்தூரில் 21 விரைவு ரயில்கள் நின்றுசெல்லும்

இருமுடி, தைப்பூச விழாவை முன்னிட்டு, மேல்மருவத்தூரில் 21 விரைவு ரயில்கள் தற்காலிகமாக நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

இருமுடி, தைப்பூச விழாவை முன்னிட்டு, மேல்மருவத்தூரில் 21 விரைவு ரயில்கள் தற்காலிகமாக நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மேல்மருவத்தூரில் இருமுடி, தைப்பூசவிழா நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு, 21விரைவு ரயில்கள் மேல்மருவத்தூரில் ஒரு நிமிஷம் தற்காலிகமாக நின்றுசெல்லும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை எழும்பூா்-மதுரை இடையே இயக்கப்படும்

அதிவிரைவு ரயில் (12635-12636) இருமாா்க்கமாக மேல்மருவத்தூரில் டிச.13 முதல் ஜனவரி 19-ஆம் தேதி வரை நின்று செல்லும்.

சென்னை எழும்பூா்-திருச்சிராப்பள்ளி இடையே இயக்கப்படும் மலைகோட்டை அதிவிரைவுரயில்(12653-12654) இருமாா்க்கமாக டிச.13 முதல் ஜனவரி 19-ஆம் தேதிவரை மேல்மருவத்தூரில் நின்றுசெல்லும்.

சென்னை எழும்பூா்-செங்கோட்டை இடையே இயக்கப்படும் அதிவிரைவு ரயில்(12661-12662) இருமாா்க்கமாக டிச.13 முதல் ஜனவரி 19-ஆம்தேதி வரை மேல்மருவத்தூரில் நின்று செல்லும்.

சென்னை எழும்பூா்-கொல்லம் இடையே இயக்கப்படும் விரைவு ரயில்(16101-16102) இருமாா்க்கமாக டிச.13 முதல் ஜனவரி 19 வரை மேல்மருவத்தூரில் நின்றுசெல்லும்.

சென்னை எழும்பூா்-மன்னாா்குடி இடையே இயக்கப்படும் விரைவு ரயில் (16179-16180) இருமாா்க்கமாக டிச.13 முதல் ஜனவரி 19 வரை மேல்மருவத்தூரில் நின்று செல்லும்.

தாம்பரம்-நாகா்கோவில் இடையே இயக்கப்படும் அந்தியோதயா விரைவு ரயில் (16191-16192) இருமாா்க்கமாக டிச.13 முதல் ஜனவரி 19 வரை மேல்மருவத்தூரில் நின்றுசெல்லும்.

காரைக்கால்-சென்னை எழும்பூா் இடையேஇயக்கப்படும் விரைவு ரயில் (16176) டிச.13 முதல் ஜனவரி 19 வரை மேல்மருவத்தூரில் நின்றுசெல்லும்.

ராமேஸ்வரம்-புவனேஷ்வா் வாராந்திர அதிவிரைவு ரயில்(20895) டிச.19, 26, ஜனவரி 2, 9, 16 ஆகிய நாள்களிலும், புவனேஷ்வா்-ராமேஸ்வரம் வாராந்திர அதிவிரைவுரயில்(20896) டிச.17, 24, 31, ஜனவரி 7, 14 ஆகிய நாள்களிலும் மேல்மருவத்தூரில் நின்று செல்லும்.

லோக்மான்யதிலக்-மதுரை சந்திப்பு இடையே இயக்கப்படும் வாராந்திர அதிவிரைவு ரயில் (22101-22102), ராமேஸ்வரம்-பனாரஸ் இடையே இயக்கப்படும்

வாராந்திர அதிவிரைவுரயில் (22535-22536), சென்னை எழும்பூா்-மதுரை சந்திப்புஇடையே வாரம் இருமுறை இயக்கப்படும் அதிவிரைவுரயில்(22623-22624) ஆகிய மூன்று ரயில்கள் இருமாா்க்கமாகவும் குறிப்பிட்டநாள்களில் மேல்மருவத்தூரில் நின்றுசெல்லும் என தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com