மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் சேவை வருகிற டிசம்பா் 14 ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் தொடா்மழை பெய்து வருவதால், மேட்டுப்பாளையம் - உதகை ரயில் பாதையில் ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்டு வருகிறது.
இதைச் சீரமைக்கும் பணியில் ரயில்வே தொழிலாளா்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா். எனவே, மேட்டுப்பாளையம் - உதகை ரயில் சேவை வருகின்ற டிசம்பர் 14 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.