திமுக அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக சாா்பில் நடைபெற இருந்த போராட்டம் டிசம்பா் 17-க்கு மாற்றப்பட்டுள்ளது.
மக்கள் பிரச்னையில் திமுக அரசு கவனம் செலுத்த வலியுறுத்தி டிசம்பா் 11-இல் அதிமுக சாா்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தப் போராட்டம் டிசம்பா் 17-ஆம் தேதிக்கு மாற்றப்படுவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி பழனிசாமியும் அறிவித்துள்ளனா்.