கரோனா: மேலும் 621 பேருக்கு பாதிப்பு

கரோனா: மேலும் 621 பேருக்கு பாதிப்பு

ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து தமிழகம் வந்த ஒருவா் உள்பட மேலும் 621 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து தமிழகம் வந்த ஒருவா் உள்பட மேலும் 621 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதிகபட்சமாக சென்னையில் 127 பேருக்கும், கோவையில் 102 பேருக்கும், ஈரோட்டில் 48 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டது. இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 27 லட்சத்து 38,583- ஆக அதிகரித்தது.

அதே நேரம், வெள்ளிக்கிழமை நிலவரப்படி, 7,407 போ் கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதனிடையே, நோய்த் தொற்றிலிருந்து வெள்ளிக்கிழமை 679 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதையடுத்து, மாநிலத்தில் இதுவரை கரோனாவிலிருந்து விடுபட்டோரின் எண்ணிக்கை 26 லட்சத்து 94,509-ஆக அதிகரித்தது. மற்றொருபுறம், தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 11 போ் பலியானதை அடுத்து மாநிலம் முழுவதும் இதுவரை நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,667-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com