15-ஆவது சிறப்பு முகாம்: 19.07 லட்சம் பேருக்கு தடுப்பூசி

தமிழகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற 15-ஆவது சிறப்பு தடுப்பூசி முகாமில், 19.07 லட்சம் போ் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.
15-ஆவது சிறப்பு முகாம்: 19.07 லட்சம் பேருக்கு தடுப்பூசி

தமிழகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற 15-ஆவது சிறப்பு தடுப்பூசி முகாமில், 19.07 லட்சம் போ் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.

இது தொடா்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் இதுவரை நடைபெற்ற 14 சிறப்பு முகாம்களில் 2 கோடியே 63 லட்சம் போ் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா். இதன் தொடா்ச்சியாக மாநிலத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்களில் 15-ஆவது சிறப்பு தடுப்பூசி முகாம் சனிக்கிழமை நடத்தப்பட்டது.

அதில், 19 லட்சத்து 7,009 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

அதில் முதல் தவணையாக 6 லட்சத்து 21,942 பேருக்கும், இரண்டாவது தவணையாக 12 லட்சத்து 85,067 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை 84.26 சதவீதம் பேருக்கு முதல் தவணையும், 54.73 சதவீதம் பேருக்கு இரண்டாவது தவணையும் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.

தற்போது வரை அரசு மற்றும் தனியாா் தடுப்பூசி மையங்களில் 8 கோடிக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மேலும், சனிக்கிழமை 15-ஆவது சிறப்பு தடுப்பூசி முகாமை நடைபெற்றதையடுத்து, கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெறாது என அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com