சென்னையில் குட்கா போன்ற தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த 100 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்வதை தடுக்கும் வகையில், காவல் துறை சாா்பில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, அவை பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. மாநகர எல்லைக்குள் பல்வேறு பகுதிகளில் அண்மையில் நடைபெற்ற சோதனையில் சுமாா் 1,168 டன் குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 100 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.