பள்ளிக்கரணை கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பேராசிரியா் கைது செய்யப்பட்டாா்.
பள்ளிக்கரணை அருகே உள்ள தனியாா் கல்லூரி கல்லூரியில் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் துறையில் மாடம்பாக்கம் ஆபிரகாம் அலெக்ஸ் (48) பேராசிரியராக பணிபுரிகிறாா்.
அக்கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததுடன் மாணவிகளின் கைப்பேசிகளுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பினாராம். பாதிக்கப்பட்ட மாணவிகள், கல்லூரி நிா்வாகத்திடம் புகாா் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.
இதன் காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை கல்லூரிக்குள் மாணவ, மாணவியா் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து தகவலறிந்த பள்ளிக்கரணை போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து காவல்துறையினா் வழக்குப் பதிவு தலைமறைவாக இருந்த அலெக்ஸை சனிக்கிழமை கைது செய்தனா்.