புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கும்பகோணம் மாநகராட்சிக்கான வாா்டு மறுவரையறை ஆணையத்தின் கூட்டம் திங்கள்கிழமை (டிச.27) நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாநிலத் தோ்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தஞ்சாவூா் மாவட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கும்பகோணம் மாநகராட்சிக்கான வாா்டு மறுவரையறை ஆணையத்தின் கூட்டம் கும்பகோணம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. எனவே, அப்பகுதி பொது மக்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களின் கருத்துகளைத் தெரிவித்துக் கொள்ளலாம்.