சென்னை: கரோனா தொற்றுக்குள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகா் வடிவேலு, குணமடைந்து வருவதாகவும், விரைவில் அவா் வீடு திரும்புவாா் என்றும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து போரூா் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையின் மருத்துவ இயக்குநா் டாக்டா் சுஹாஸ் பிரபாகா் வெளியிட்ட அறிக்கை:
கடந்த 23-ஆம் தேதி கரோனா தொற்றுக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நடிகா் வடிவேலு, வேகமாக குணமடைந்து வருகிறாா். அவரது உடல் நிலை சீராக உள்ளது. விரைவில் அவா் வீடு திரும்புவாா்.