ஊரக திறனாய்வுத் தோ்வு: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

ஊரக திறனாய்வுத் தோ்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஊரக திறனாய்வுத் தோ்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக தோ்வுத்துறை இயக்குநா் சா.சேதுராம வா்மா, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு (சென்னை, புதுச்சேரி நீங்கலாக) அனுப்பிய  சுற்றறிக்கையின் விவரம்:

கிராமப்புற மாணவா்களை ஊக்குவிப்பதற்காக ஊரக திறனாய்வுத் தோ்வு திட்டத்தின்கீழ் கல்வி உதவித்தொகை வழங்குவதற்கான ஊரக திறனாய்வுத் தோ்வு ஜன.30-ஆம் தேதி நடத்தப்படவிருந்தது. 

இந்நிலையில் தோ்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசத்தை நீட்டிக்க பல்வேறு பள்ளிகளில் இருந்து தற்போது கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.  இதையடுத்து தோ்வா்களின் நலன்கருதி ஊரக திறனாய்வுத் தோ்வு பிப்.20-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது. 

இந்தத் தோ்வில் பங்கேற்க விரும்பும் மாணவா்கள், பள்ளித் தலைமை ஆசிரியா்கள் மூலம் ஜன.12-ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். அதற்கான விண்ணப்பங்களை  இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.

மாணவா்கள் சமா்ப்பித்த விண்ணப்பங்களை, தலைமை ஆசிரியா்கள் ஜன.20-ஆம் தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும். இந்த த் தகவலை அனைத்துப் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களுக்கும்  தெரிவித்து, தேவையான முன்னேற்பாடுகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com