தமிழகத்தில் ஆயிரத்தைத் தாண்டிய கரோனா பாதிப்பு

தமிழகத்தில் இன்று மேலும் 1,155 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
தமிழகத்தில் ஆயிரத்தைத் தாண்டிய கரோனா பாதிப்பு

தமிழகத்தில் இன்று மேலும் 1,155 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
மக்கள் நல்வாழ்வுத் துறைத் தகவல்படி, மாநிலத்தில் இதுவரை 5.74 கோடிக்கும் மேற்பட்ட கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் 27 லட்சத்து 48,045 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று வெளியான பரிசோதனை முடிவுகளில் அதிகபட்சமாக சென்னையில் 589 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனிடையே, மேலும் 603 போ் கரோனாவிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா்.  

இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 27 லட்சத்து 03,799-ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 7,470 போ் உள்ளதாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 11 போ் பலியாகியதை அடுத்து நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,776-ஆக அதிகரித்துள்ளது.
ஒமைக்ரான்: தமிழகத்தில் மேலும் 74 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது. 120 மாதிரிகளை பரிசோதனை செய்ததில் 74 பேருக்கு தொற்று உறுதியானது. ஏற்கெனவே 46 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியான நிலையில் மேலும் 74 பேருக்கு பாதிப்பு உறுதியானது. இதன்மூலம் தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 120ஆக உயர்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com