ஸ்ரீ சித்திவிநாயகர் கோயிலில் குடமுழுக்கு விழா

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரி வளாகத்தில் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய குடமுழுக்கு விழா திங்கள்கிழமை  நடைபெற்றது.
ஸ்ரீ சித்திவிநாயகர் கோயிலில் குடமுழுக்கு விழா

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரி வளாகத்தில் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய குடமுழுக்கு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஸ்தானிகர் சிவஸ்ரீ எஸ். கே .ராஜாபட்டர்  தலைமையில் நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை மாலை முதற் கால யாக பூஜையில் தொடங்கி திங்கள்கிழமை காலை விக்னேஸ்வர பூஜை, இரண்டாம் கால யாக பூஜை, தீபாரதனை உடன் கலசங்கள் புறப்பட்டு சித்திவிநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம், உடன் மகா அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் கல்லூரி ஆட்சி மன்ற குழு தலைவர், செயலர், உறுப்பினர்கள், பழையபாளையம் கமிட்டி, பரிபாலன கமிட்டி உறுப்பினர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள், மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com