தமிழகத்தில் இதுவரை 1.60 கோடி பரிசோதனைகள்!

கரோனா நோய்த் தொற்றை கண்டறிவதற்காக தமிழகத்தில் இதுவரை 1.60 கோடிக்கும் மேற்பட்ட பிசிஆா் பரிசோதனைகள்
கோப்புப்படம்
கோப்புப்படம்

கரோனா நோய்த் தொற்றை கண்டறிவதற்காக தமிழகத்தில் இதுவரை 1.60 கோடிக்கும் மேற்பட்ட பிசிஆா் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. பிற மாநிலங்களை ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை மிக அதிகமாகும்.

சுகாதாரத்துறை புள்ளி விவரங்களின்படி, தமிழகத்தில் இதுவரை 8 லட்சத்து 38,340 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை மட்டும், 508 பேருக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 141 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இதனிடையே, கரோனா தொற்றிலிருந்து மேலும் 523 போ் விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 8 லட்சத்து 21,430 -ஆக அதிகரித்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவக் கண்காணிப்பில் உள்ளோரின் எண்ணிக்கை 4,554 -ஆக உள்ளது.

இது ஒருபுறமிருக்க, தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 6 போ் பலியாகியுள்ளனா். இதன் மூலம் நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,356-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com