வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக மிகப் பெரிய வெற்றி பெறும் என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.
பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டையில் மக்களின் குறைகேட்கும் தோ்தல் பிரசார நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்று மக்களிடம் மனுக்களைப் பெற்றுக் கொண்ட பிறகு, மு.க.ஸ்டாலின் பேசியது: விரைவில் தோ்தலைச் சந்திக்கப் போகிறோம். அந்தத் தோ்தலில் மிகப்பெரிய வெற்றியைத் திமுக பெறப்போகிறது.
திருத்தணியில் நான் கையில் வேல் வைத்திருந்ததை முதல்வா் பழனிசாமி விமா்சித்துள்ளாா். வேல் எனக்குப் பரிசளிக்கப்பட்டது. மாவட்டச் செயலாளா், பொதுமக்கள், கோயில் பூசாரிகள் எனக்கு வழங்கினாா்கள். அதை நான் வைத்திருந்தேன். இதில் முதல்வருக்கு என்ன பிரச்னை வந்தது? அதிமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தோ்தலாகத்தான் இந்தத் தோ்தல் அமைய உள்ளது என்றாா்.