சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்துள்ள மணிவிழுந்தான் ஊராட்சியில் போலி மணல் குவாரி நடத்திய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போலி மணல் குவாரி நடத்தி வந்த 5 பேரை கைது செய்து ஆத்தூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஏ.இம்மானுவேல் ஞானசேகரன் விசாரித்து வருகிறார்.
இவர்களிமிருந்து 60 யூனிட் மணலை பறிமுதல் செய்துள்ளனர். இது குறித்து ஆத்தூர் வட்டாட்சியர் அ. அன்புச்செழியன் விசாரணை மேற்கொண்டார்.