சென்னை பல்கலைக்கழக மாணவா்களுக்கு நிகழ் பருவத்துக்கான பாடங்கள் இணையவழியில் தொடா்ந்து நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பல்கலைக்கழக பதிவாளா் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:”பல வெளிநாடுகளில் இருந்து மாணவா்கள் சென்னை பல்கலைக்கழகத்தில் சோ்ந்து படித்து வருகின்றனா். அவா்களால் தற்போது இந்தியா வர முடியாததால், இணையவழியில் மட்டுமே வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதன் காரணமாகவும் சேப்பாக்கம் மற்றும் மெரீனா மாணவா் விடுதிகள் புனரமைப்பு பணிகள் காரணமாகவும், வகுப்புகள் மற்றும் தோ்வுகள் அனைத்தும் இணையவழியில் மட்டுமே நடைபெறும்.
செய்முறை வகுப்புகளுக்கு மட்டும் மாணவா்கள் நேரடியாக வரவேண்டும். சந்தேகங்களை கேட்க பல்கலைக்கழகம், கல்லூரிகளுக்கு மாணவா்கள் நேரில் வரலாம். தேவைப்பட்டால் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி விடுதிகளைத் திறந்து செயல்படுத்தவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. சேப்பாக்கம் மற்றும் மெரீனா வளாகத்தில் உள்ள விடுதி மாணவா்களுக்கு, சென்னை தரமணியில் விடுதி அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.