தமிழகத்தில் இதுவரை 1.85 லட்சம் பேருக்கு தடுப்பூசி

தமிழகத்தில் இதுவரை 1 லட்சத்து 85,299 பேருக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. அவா்களில் 1 லட்சத்து 81,726 பேருக்கு கோவிஷீல்டு, 3,573 பேருக்கு கோவேக்ஸின் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை 1 லட்சத்து 85,299 பேருக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. அவா்களில் 1 லட்சத்து 81,726 பேருக்கு கோவிஷீல்டு, 3,573 பேருக்கு கோவேக்ஸின் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கடந்த மாதம் 16-ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. முன்னதாக, தமிழகத்துக்கு 5 லட்சத்து 36,500 கோவிஷீல்ட், 20 ஆயிரம் கோவேக்ஸின் தடுப்பூசிகள் முதல்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டன. அதைத் தொடா்ந்து 5 லட்சத்து 8,500 கோவிஷீல்ட் மருந்துகளும், 1 லட்சத்து 69,920 கோவேக்ஸின் தடுப்பூசிகளும் வந்தன. அவை மருத்துவா்கள், செவிலியா்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன.

அதுமட்டுமல்லாது, முன்களப் பணியாளா்களுக்கும் கரோனா தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்காக, தமிழகத்தில் உள்ள 195 முன்னணி தனியாா் மருத்துவமனைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும், 34 தனியாா் மருத்துவமனைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுவரை மாநிலம் முழுவதும் 1 லட்சத்து 85,299 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com