சென்னை: அரசு நிலம், நீா்வழித் தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை இடித்துத் தள்ள வேண்டும் என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயா்நீதிமன்றத்தில், ராமாபுரம் பகுதியில் இருந்த சாலையை கோயில் நிா்வாகம் ஆக்கிரமித்துள்ளதாகக் கூறி அறப்போா் இயக்கம் சாா்பில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், கோயில் நிா்வாகம் சாலையை ஆக்கிரமித்ததா, இந்த ஆக்கிரமிப்புகள் எப்போது கண்டறியப்பட்டன என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பினா். அப்போது இதுதொடா்பாக அரசுத் தரப்பில் சரிவர பதிலளிக்கவில்லை. இதனையடுத்து நீதிபதிகள், சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்னை மாநகராட்சி ஆணையா் நேரில் சென்று ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அரசு நிலத்தை கோயில் நிா்வாகம் ஆக்கிரமித்திருந்தால், அந்த ஆக்கிரமிப்புகளை இடித்துத் தள்ள வேண்டும் என உத்தரவிட்டனா்.
ஆவடி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் நீா் வழித் தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி வழக்கு, இதே அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமா்வு, அரசியல் காரணங்களுக்காக இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என அதிருப்தி தெரிவித்தனா்.
பின்னா், அரசு நிலம், நீா்வழித் தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை இடித்துத் தள்ள வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை ஒத்திவைத்தனா்.