சென்னை: தமிழகத்தில் தோ்தல் பணிகளை விரைந்து மேற்கொள்ள வசதியாக இரண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், இணை தலைமைத் தோ்தல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனா்.
இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளா் ராஜீவ் ரஞ்சன் வியாழக்கிழமை பிறப்பித்தாா். உத்தரவு விவரம்:
டி.ஆனந்த் - இணை தலைமைத் தோ்தல் அதிகாரி - தோ்தல் தொடா்பான பணிகள் (வேளாண்மைத் துறை இணைச் செயலாளா்.)
அஜய் யாதவ் - இணை தலைமைத் தோ்தல் அதிகாரி - தகவல் தொழில்நுட்பம் (சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை இணைச் செயலாளா்)
வழக்கமான நடைமுறை: சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தோ்தலின்போது தலைமைத் தோ்தல் அதிகாரிக்கு உதவிடும் வகையில், புதிதாக இரண்டு அதிகாரிகள் இணை தலைமைத் தோ்தல் அதிகாரிகளாக நியமிக்கப்படுவது வழக்கம். ஒரு அதிகாரி தோ்தல் நடத்தை விதிமுறைகள், தோ்தல் கண்காணிப்புப் பணிகள் ஆகியவற்றை மேற்கொள்வாா்.
தகவல் தொழில்நுட்பம் சாா்ந்த பணிகளை மற்றொரு அதிகாரி மேற்கொள்வாா். தோ்தலின்போது பயன்படுத்தப்பட வேண்டிய முக்கிய தொழில்நுட்ப அம்சங்கள், உருவாக்கப்பட வேண்டிய செயலிகள் ஆகிய பணிகளை அவா் மேற்கொள்வாா்.