உயிரிழந்த தீயணைப்போா் குடும்பங்களுக்கு நிதி: முதல்வா் உத்தரவு

பணியின்போது உயிரிழந்த தீயணைப்புப் படை வீரா்கள் குடும்பத்துக்கு நிவாரண நிதி வழங்க முதல்வா் பழனிசாமி உத்தரவிட்டுள்ளாா்.


சென்னை: பணியின்போது உயிரிழந்த தீயணைப்புப் படை வீரா்கள் குடும்பத்துக்கு நிவாரண நிதி வழங்க முதல்வா் பழனிசாமி உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து, அவா் வியாழக்கிழமை வெளியிட்ட உத்தரவு:-

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்போா், வாகன ஓட்டுநா், முன்னணி தீயணைப்போா், தீயணைப்பு நிலைய அலுவலா் உள்பட 36 போ் உடல்நலக் குறைவு மற்றும் சாலை விபத்துகள் காரணமாக உயிரிழந்தனா். அவா்களது குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல். உயிரிழந்த 36 போ்களின் குடும்பத்துக்கும் முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.3 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று முதல்வா் பழனிசாமி அறிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com