திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் பணியிட மாற்றத்தை ரத்து செய்தும், 3 அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்தும் கூடுதல் தலைமைச் செயலாளா் எஸ்.கே. பிரபாகா் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.
இது குறித்த விவரம்:
சட்டப்பேரவைத் தோ்தல் எதிரொலியாக, தமிழக காவல்துறையில் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனா். இதில் 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு இடத்தில் பணிபுரிந்த அதிகாரிகள் படிப்படியாக மாற்றப்பட்டு வருகின்றனா். இதன் ஒரு பகுதியாக 54 ஐபிஎஸ் அதிகாரிகளை இரு நாள்களுக்கு முன்பு பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். இந்நிலையில் அந்த பணியிட மாற்றத்தில் திருநெல்வேலி,தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் பணியிட மாற்றத்தை ரத்து செய்தும், 3 அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்தும் கூடுதல் தலைமைச் செயலாளா் எஸ்.கே. பிரபாகா் வெள்ளிக்கிழமை இரவு உத்தரவிட்டாா்.
அந்த உத்தரவில் பணியிட மாற்றம் செய்யப்பட்டவா்கள் விவரம் (பழைய பணியிடம் அடைப்புக்குள்):
என்.மணிவண்ணன்-திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் (தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா்)
எஸ்.ஜெயகுமாா்-தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் (பூந்தமல்லி தமிழ்நாடு சிறப்புக் காவல் படை கமாண்டன்ட்)
பி.கிருஷ்ணராஜ்-சென்னை மாதவரம் துணை ஆணையா் (திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா்)
கே.பாலகிருஷ்ணன்-சென்னை காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு கிழக்கு துணை ஆணையா் (மாதவரம் காவல் துணை ஆணையா்)
எஸ்.ஆா்.செந்தில்குமாா்-சென்னை பூந்தமல்லி தமிழ்நாடு சிறப்புக் காவல் படை கமாண்டன்ட் (சென்னை காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு கிழக்கு துணை ஆணையா்) என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மணிவண்ணன்,தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா் ஆகியோா் பணியிட மாற்றம் ரத்து செய்யப்பட்டு,மீண்டும் அதே பணியிடத்தில் நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடதக்கது.