மக்கள் நீதி மய்யம் கட்சியில் போட்டியிட விரும்புபவர்களுக்கு விருப்ப மனு விநியோகம் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவை தோ்தல்களிலும், கன்னியாகுமரி மக்களவை இடைத்தோ்தலிலும் மக்கள் நீதி மய்யம் களம் காண்கிறது.
இதனால் தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கும், புதுச்சேரியின் 30 தொகுதிகளுக்கும், கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கும் விருப்ப மனு விநியோகம் தொடங்கப்பட்டுள்ளது.
இதனை அக்கட்சியின் தலைவர் கமலஹாசன் தொடங்கி வைத்தார். ஆன்லைன் மற்றும் ஆப்லைன் என்று விருப்பமனுவை சமர்ப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.